Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Wednesday, December 12, 2012

‘வளர்ச்சிக்கும் விருத்திக்குமான உரிமையானது பிள்ளைகளுக்குறிய உரிமைகளுள் ஒன்றாகும்’

diploma_in_education_Tamil

     இதனை இங்கிருந்து ஆரம்பிக்கலாம் சிலியின் நோபல் பரிசுக்குறிய காரெய்லா மிஸ்ட்ரால் சிறுவர்களின் வளர்ச்சி விருத்தி பற்றி கூறும் கூற்று இதனை மிகவூம் தெளிவாக்க காட்டக் கூடியதாகும். அவர் ‘எமக்குத் தேவைப்படும் பல பொருள்களைத் தாமதிக்கலாம். ஆனால் பிள்ளைகளுக்கு அவ்வாறு நடக்க முடியாது. அப்பிள்ளைகளின் எலும்புகள் உருப்படுகின்றன. குருதி ஆக்கப்படுகின்றது. புலன் உறுப்புக்கள் விருத்தியாகின்றன. இவ்வாறான தகுந்த நேரத்தில் நாளை எனக் காலம் தாழ்த்த முடியாது. அவருடைய நாமம் இன்று’ என்று குறிப்பிடுகின்றதன். ஆழம்தான் என்ன.
சிறுவர் என்ற வயதெல்லையைப் பொருத்தவரை அவர்கள் அனைத்து பகுதிகளினாலும் வளர்ச்சியூம் விருத்தியூம் அடைந்து கொண்டிருப்பவர்கள். ஒரு வளர்ச்சி விருத்தி நடைபெறுகின்றது என்றால் அங்கு அதற்குத் தேவையான அனைத்தும் போதியளவூ கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாத போது அது வளர்ச்சியடையாது அல்லது வளர்ச்சி சரியானதாக இருக்காது.
ஆனாலும் மனிதர்களைப் பொருத்தவரை அவர்கள் உடலால் மட்டும் வளர்ச்சியடைபவர்கள் அல்லர். அதிலும் சிறுவர்களைப் பார்க்கும் போது அவர்கள் மனஎழுச்சி விருத்தி, மொழி விருத்தி, உள இயக்கத் திறன்கள், ஆக்கத் திறன்கள், ஆளுமை, சமூகவிருத்தி என பலகோணங்களிலும் வளர்ச்சியூம் விருத்தியூம் அடைகின்றனர்.
சிறுவர்கள் வளர்ச்சியின் ஆரம்ப ஊற்றுக்கள். இந்த இளங்கன்றுகளின் பூரண விருத்தியின் அத்திவாரம் சுகாதாரமும், உடலியல் விருத்தியூமாகும். எனவே தகுந்த ஊட்டச்சத்துக்கள் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். அவை அந்ததந்த வளர்ச்சிக்கட்டத்துக்கு தகுந்தாட்போல் போதியளவில் கிடைக்கச் செய்யவேண்டும். அத்துடன் சரியான சுகாதார வசதிகளையூம், சுகாதார பழக்கவழக்கங்களையூம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். இல்லாதபோது அவர்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதன் காரணமாக நோய்கள் அவசரமாக தொற்றக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. இவற்றின் மூலம் பிள்ளைகள் அனைவருக்கும் அனைத்து சுகாதார வசதிகளையூம் கிடைக்கச் செய்யவேண்டும்.
அதே போன்று இன்னும் பார்க்கும் போது உடலியல் விருத்திக்கான சவதிகளுடன் பிள்ளையானது தனது அறிவூ, உடலியக்கம், மனவெழுச்சி போன்ற வற்றின் விருத்தியில் உச்ச நிலையை அடைவதற்கு தகுதியான சூழல் வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். பிள்ளை நன்றான இயங்கக் கூடிய வயது சிறு காலப்பகுதியாகும். இக்காலத்தில் அதிகம் இயங்குவதன் மூலம் இரத்த நலங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் சீராக அமைவதற்கு காரணமாவதுடன் சுவாச சுற்றௌட்டமும் சீராக வேலைசெய்வதற்கு பிள்ளைகளது உடலியக்கம் தான் காரணமாக அமைகின்றது. அதே நேரம் மனவெழுச்சி விருத்திக்கான வழிகள் சரியாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். இவற்றுக்காக வேண்டி சிறுவர் பிராயத்தில் முறைசார்ந்த முறை சாராத கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இக்காலத்தில் இவர்களுக்கு விஷேடமாக உடலின் பருமன், தராதரம், பண்பு என்பவற்றின் வரிசையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை ஒரு ஒழுங்கில் வரிசையான ஏற்படுகின்றன. இங்கு ஆண்பிள்ளைகள் உயரத்தில் கூடியவர்களாகவூம் பெண்பிள்ளைகள் அகன்ற தன்மையையூம் பெறுகின்றனர். அதேபோன்று இந்த காலத்தில் சிறுவர்களது உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் பல் காரணிகளை கண்டு கொள்ள முடியூம். அவற்றில் போதிய ஊட்டச்சத்துக்கள் அற்ற உணவூ இவர்களது வளர்ச்சியில் விகாரங்களை ஏற்படுத்துகின்றன. குறைவான நிறையினால் அந்த வயதுக்குறிய வளர்ச்சியை பெறமுடியாது போகின்றதுடன் போசாக்கின்மை நோய்களை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்களினால் சிறுவர்களது உடல் பலவீனமாவதுடன் ஆளுமை குன்றிவிடுகின்றன.
diploma_in_education_Tamil
இந்த காலத்தில் மனித மூலையின் 80 வீதம் வளர்ச்சியடையக் கூடிய காலமாகும். இங்கு அறிவூ என்கின்ற அம்சம் மிகவூம் பிரதானமாகதாகும். இந்த அறிவூ என்பது உள்ளார்ந்த செயற்பாடாகும். இதனால் மனிதன் தெரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுகின்றான், நினைவூ கூர்தல், விளங்கிக் கொள்ளுதல், தொடர்பு காணுதல், வகுத்துப் பார்த்தல், தொகுத்தாராய்தல், கற்பனை செய்தல், பிரச்சினைகளை தீர்த்தல், பல்வேறு ஆக்கச் செயல்களை செய்தல் என அவனது அறிவூ விரிந்து செல்லும் காலமாகும். இதன் போது அவனிடத்தில் அறிவூ அல்லது உள விருத்தி என்கின்ற அம்சம் சரியாக வளங்கப்பட்டிருக்க வேண்டும். பியாஜேயூம் இக்ககாலத்தின் சிறுவர்களின் அறிவூ வளர்ச்சி குறித்து நான்கு நிலைகளை சுட்டிக் காட்டுகின்றார்.
சிறுவர்களின் ஆரம்ப காலங்களிலே மொழி ஆற்றல் துரிதமாக வளர்ச்சியடையக் கூடியதாகக் காணப்படுகின்றது. இந்த ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்குறிய சிறந்த சூழல் அவர்களுக்குக் கிடைக்கும் போது மொழிஆற்றலை தாமாகவே பெற்றுக் கொள்வார்கள். இதற்கு இவர்களின் வீடுகளில் நிகழும் தொடர்பாடல் மிகவூம் முக்கியமானதாகும். அதே போன்று வயது வளர பாடசாலைகளில், தொடர்பாடல் ஊடகங்களின் செல்வாக்கினாலும் அவர்களிடம் மொழி ஆற்றல் மேலும் வளர்வதற்கு அது காரணமாகின்றது.
எனவே சிறுவர்கள் என்பவர்கள் அவர்கள் வேகமான வளர்ச்சி கொண்டவர்கள். அவர்களது வளர்ச்சிக்கு ஏற்ப அவர்கள் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பர். இதனை பெரியவர்கள் கட்டுப்பாடுகள் இட்டு தடுக்க முறியடிக்க முயலக்கூடாது. பிள்ளைகளது ஆக்கத்திறன் விருத்தி, ஆளுமை விருத்தி, விளையாட்டு, ஓய்வூ என்கின்ற அனைத்தையூம் அப்பிள்ளை பெற்றுக்கொள்வதே வளர்ச்சியாகும்.
இக்காலம் பெரியவர்களை காட்டிலும் சிறுவர்கள் என்கின்ற வயதியருக்கே உரித்தானதாகும் என்பது இங்கு பேசப்பட்ட விடயங்களில் இருந்து மிகத் தௌpவாக் அறிந்து கொள்ளமுடிகின்றது.

1948 – 1977 காலப்பகுதியில் உயர் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் கல்வி நிர்வாகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள்

diploma_in_education_ Tamil

    இலங்கை சுதந்திரத்துக்கு முன்னர் இடைநிலைக்குப் பிற்பட்ட கல்வித்துறையில் ஓரளவூக்கு முன்னேற்றம் காணப்பட்டிருந்ததெனினும், 1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரே போதியளவான, உண்மையான கல்விக்கோரிககைகள் விடுக்கப்பட்டதனை அவதானிக் முடிகின்றது. சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டின் அனைத்துத் துறைக்கும் நாட்டு மக்களையே நம்பியிருக்க வேண்டி எற்பட்டதாலும். பல்துறை நிபுணர்களை உருவாக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது. என்றாலும் இதனை பல்கலைக்கழகத்தால மட்டும் நிறைவூ செய்ய முடியாத நிலை தோன்றவே அதனை ஈடுசெய்வதற்கு பல்வேறு வகையான கல்வி வழங்கள்களின் தேவைதோன்றியது இதன் போது உயர் கல்வியோடு ஆசிரியர் கல்வி மற்றும் கல்வி நிறுவாகம் மற்றும் தொழில்னுட்பக் கல்வி போன்றன வளர்ச்சியடைந்தது.
உயர் கல்வி என்பது 1942ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஆரம்பித்தது முதல் அதன் வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. இந்த வகையில் 1950இல் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை கல்வி, விஞ்ஞானம், மருத்துவம், சட்டம்,  விவசாயம்,  மிருக வைத்தியம் என்றும் ஆறு பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 1952இல் கலைத்துறை மற்றும் கீலைத்தேய கல்வித்துறை என்பன மாத்திரமே பேராதனை பல்கலையில் இருந்தது பின்னர் 1961இல் விஞ்ஞான பீடமும் அடுத்து மருத்துவ பீடமும் ஆரம்பிக்கப்பட்டன.
1960இன் பின்னர் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் பயில்வதற்காக கலைப்பீடத்துக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 1958இன் பின்னர் வித்தியோதயஇ வித்தியாலங்காரப் பிரிவினைகளுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. தேவையூம் அழுத்தமும் அதிகரித்தன் காரணமாக 1962இல் கொழும்பில் இரண்டாவது கலைப்பீடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.  இதனை அடுத்து கொழும்பு பல்கலைக்கழகம் தன்னாட்சியூள்ள பல்கலையாக உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து 1966 களின் பின்னர் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் சேர்க்கும் அளவில் வரம்பு அமைக்கப்பட்டது அதிகமாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு சேர்வதில் தடை ஏற்படுத்தப்பட்ட போட்டிநிலை உருவாக்கப்பட்டது.
1971இல் ஜயரட்ன குழுவினது சிபாரிசுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களினது கணிப்பு நிலையை ஏற்றத்தாழ்வில்லாத நிலையை ஏற்படுத்தியதுடன் 1972இல் ஒரு துணைவேந்தரையூம் மேல்நிலை ஆட்சிக்குழுவையூம் ஏற்படுத்தி அதன் மூலம் அது நிர்வகிக்கப்பட்டது. அதேபோன்று பல்கழைக்கலைத் திட்டத்தில் வேலை மற்றும் தொழில் சார்பான கற்கை நெறிகள் புகுத்தப்பட்டன. அத்துடன் காலி. யாழ்பாணம், கண்டி, தெகிவளை ஆகிய இடங்களில் பல்தொழிநுட்பக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. ஆவற்றில் மூன்றாம் நிலை கல்வி நெறிகளும், தொழிற் பயிற்சி நெறிகளும் புகுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த பயிற்சி நிலையங்கள் கனி~;ட பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தப்பட்டன. இந்த வகையில் காலத்துக்குக் காலம் உயர் கல்விதுறை பல்வேறு மாற்றங்களுக்கும் உற்பட்டு வந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
அதேபோன்று ஒரு சமூகத்தின், நாட்டின் முதுகெழும்பாக இருக்கும் ஆசிரியர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளது. இந்த மாற்றம் கட்டாயம் நிகழவேண்டிய ஒன்றாகும் ஏனெனில் கல்வி கொள்கை வகுப்பாளர்கள் எத்தகைய கொள்கைகயை வகுத்த போதும் அதனை நடைமுறைப்படுத்துபவர்கள் ஆசிரியர்களாக இருப்பவர்களே.
இந்த வகையில் 1947 கன்னங்கர சீர்திருத்தங்கள் காரணமாக கல்வி முறைமை விரிவடைந்து முக்கிய பாடங்களின் ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்தது. இதனால் இத்தகைய ஆசிரியர்களுக்கான விஷேட கல்வி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டன 1953 விஞ்ஞHனத்துக்கும், 1954 இல் கணிதத்துக்கும், 1955இல் தொழிற்பாடங்களும், 1956இல் ஆங்கிளத்துக்கும் என்று பல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1958 முதல் ஆசிரியர்கள் இப்பயிற்சி நெறிகளில் சேர்வதற்கான தகைமைகள் உயர்த்தப்பட்டன. இதன் போது ஆசிரியர்களுக்கு முழுச் சம்பளத்துடனும், லீவூடனும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
1953இ 1954 களில் கொழும்புத்திட்டத்தின் உதவிகளைப் பெற்று கைப்பணித்துறையில் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் நியூஸிலாந்துக்கு அனுப்பி பயிற்சி அளிக்கப்பட்டனர். 1957 களில் நஃபீல்ட் கருத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அதனுடாக பயிற்றப்பட்ட ஆசிரியர்களை வழங்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
1960ஆம் ஆண்டிலிருந்து மதப்பிரிவினர் நடாத்திய உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை விஷேட சட்டத்தின் மூலம் அரசு பொறுப்பேற்றது முக்கிய ஒரு நிகழ்வாகும். தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு இணங்க வித்தியோதய வித்தியலங்கார மற்றும் பல்கலைக்கழகங்களிடம் ஆசிரியர் பயிற்சி பொறுப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தொழிலுக்குறிய முன்பயிற்சி வழங்குவதற்காக பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்விமானி கற்கை நெறி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்படும் பயிற்சி நெறிகள், கல்விக் கல்லூரிகள் என்பவற்றை ஆராய்ந்து அதனது குறைநிறைகளை கவனிக்க வேண்டி ஏற்பட்டதன் விளைவாக 1965இல் ஆசிரியர் கல்விக் கல்லூரிகளின் கட்டமைப்பு, பயிற்சி வழங்கும் முறைஇ நுழைவூத்தகைமை என்பவற்றை ஆராயூம் பொறுட்டு விஷேட குழு ஒன்று இஸ்தாபிக்கப்பட்டது. 1945இல் 25501 ஆக இருந்த ஆசிரியர் எண்ணிககை 1975 ஆகும் போது 104043ஆக அதிகரித்தது. இவ்வாறு ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது இக்கல்விக் கல்லூரிகள் போதாமை காரணமாக கல்விக் கல்லூரிகள் அதிகரிக்கப்பட்டன.
1967களில் ஆசிரியர்களில் 57 சதவீதத்தினர் எத்தகைய பயிற்சிகளையூம் பெறாதவர்களாகவே இருந்தனர். இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு கல்விப்பணியின் நிர்வாக பகுதிகளை நிறைவேற்ற 1966இல் கல்வி அமைச்;சில் கல்விப்பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் 1972 ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக கல்விக்கல்லூரிகளின் துணையூடன் தபால் மூலம் பயிற்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி நெறி ஏற்பனவே இலங்கைப் பல்கலையால் பட்டதாரி ஆசிரியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 1975இல் ஆசிரியர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கில் பேராதனை, வித்தியாலங்கார, வித்தியோதயஇ,கொழும்புப் பல்கலை வளாகங்களில் உள்ள கல்வித்துறைகளை இணைத்து கல்விப்பீடம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கல்விமாணி தொடக்கம் கலாநிதிப்பட்டம் வரையான பயிற்சி நெறிகளை அது வழங்கியது.
1975களின் பின்னர் நுண்கற்பித்தல்இ அணிமுறை கற்பித்தல், பாவனை நடிப்பு, புதிய எண்ணக்கரு கற்பித்தல் போன்ற பல கற்பித்தற் பரிசோதனைகளாக ஆசிரியர் பயிற்சி மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன. இங்கு 13 பாடத்துறைகள் சிறப்பு தேர்ச்சிக்காக இணைக்கப்பட்டன.
இன்று வரையூம் மிகவூம் சிறப்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை பல ஆசிரியர் பயிற்சி பாசறைகள் வழங்கிவருவதுடன். தேசிய கல்வி நிறுவகத்தின் வழிகாட்டலில் டிப்ளோமா பயிற்சி நெறிகள் ஆரம்பிக்ப்பட்டுள்ளன. அதே போன்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மூலம் இன்னும் சிறப்பாக நவீனமயப்படுத்தப்பட்ட முறையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிகளை இவை வழங்கி ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக வழிவகைகளை செய்துவருகின்றது.
இவ்வாறன பல மாற்றங்கள் பல்வேறு துறைகளில் நிகழ்ந்து வருகின்ற வேலையில் கல்வி நிறுவாகத் துறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. ஆரம்பமாக பாடசாலைகளினதும் ஆசிரியர்களினதும் அதுசார்ந்த ஏனைய விடயங்களினதும் தேவை, எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகவூம் 1960களில் உதவி பெறும் பாடசாலைகளையூம் தன்னுடன் அரசு இணைத்துக் கொண்டதன் காரணமாகவூம் கல்வித்துறைக்கு சுமை அதிகரித்தது தனியாக நின்று முழுவதனையூம் கவனிப்பது அசாத்தியமாகியது. இதன் விளைவாக நிர்வாகம் பரவளாக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது. இதனைய கல்வி நிறுவாகம் என்கின்றௌம்.
1961 முதலாவது நிர்வாகப் பரவலாக்கல் மாநாடு பண்டாரவலையில் ஏற்பாடுசெய்யப்பட்டதன் விளைவாக அதே வருடம் ஒக்டோபர் மாதம் நிர்வாகப் பரவலாக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் போது 10 பிராந்தியங்களில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் அவற்றுக்குட்பட்ட 13 பிரதேசங்கள் கல்வி அதிகாரிகளின் நிருவாகத்தின் கட்டுப்பாட்டிலும் அமைக்கப்பட்டன.
1966இல் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் கல்வி அமைச்சு அடுத்து பிரதி கல்வி அமைச்சர் அடுத்து கல்வி செயலாளரும் பணிப்பாளரும் அதனை அடுத்து பிதிப் பணிப்பாளர்கள் அடுத்து ஆரம்பஇ இடைநிலை, தொழிநுட்ப கல்வித் துறைகள் என்ற வழிமுறை அமைக்கப்பட்டது. 1967இல் 14 ஆக இருந்து கல்வி பிரந்தியத் திணைக்களங்கள் 15 ஆக உயர்ந்தது. இது 1971 ஆகும் போது 24ஆக அதிகரித்தது.
முகாமைத்துவ மறுசீரமைப்புக் குழு பாடசாலைமட்ட, முகாமைத்துவ நிருவாக முறைமை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக தனது பரிந்துரைகளை முன்வைத்தது. தேசிய கல்வி நிறுவகம் கலைத்திட்ட மேம்பாட்டில் கவனம் செலுத்தியதுடன், பயிற்றுவிப்பதிலும் தொடர்புபட்டிருந்தது. பொது நிர்வாக ஆணைக்குழு போன்று கல்வி சேவைக்குழு ஒன்றும் முகாமைத்துவ தரமேம்பாட்டை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு கல்வி வயய அலுவலகமும் கல்வி நிருவாகம்இ கல்வி அபிவிருத்தி, பொது நிர்வாகம், நிதி, பாடசாலை செயற்பாடுகள் என 5 பிரிவூகளைக் கொண்டதாக  உருவாக்கப்பட்டதுடன் பிராந்தியப் பணிப்பாளர் அப்பிரதேசத்தின் கல்வி விருத்தி முகாமைத்துவத்தற்கு பொறுப்பாக காணப்பட்டார். இவ்வாறாக பல மாற்றங்கள் காலத்துக்குக் காலம் ஏற்பட்டு வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அரசாங்கசபை காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் சுருக்க விளக்கம்

diploma_in_education_ Tamil

     இலங்கையை ஆண்டுவந்த கடைசி ஐரோப்பியர்களான பிரித்தானியரின் ஆயுற்காலம் முடிவடைந்து வருகின்ற காலத்தில் இலங்கை ஓரளவுக்கு இறைமை பெறத்தக்க அரசுரிமை நாடு என்னும் அந்தஸ்து 1931இல் கிடைத்தது. இதனால் சட்டமாக்கும் அதிகாரம் அதனை நிறைவேற்றும் கடமையும் அரச சபைக்கு வாய்த்தது. அதனைப் பயன்படுத்தி திரு. கன்னங்கர அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கல்வி பற்றிய சட்டங்களை இயற்றி வந்தது. இந்த அடிப்படையில்,
ஆரம்பத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நிறைவேற்றுக் கல்விக் குழுவூக்கு இணையானதாக ஆளுனருக்குப் பொறுப்பான பிரதம நிறைவேற்று அதிகாரியான கல்விப் பணிப்பாளர் இருந்தார். இவை இரண்டும் இணைந்து செல்லாத நிலை காணப்பட்டது. இதில் திருப்தி கொள்ளாததால் 1939 ஆம் ஆண்டு கல்வி பற்றிய கட்டளைச் சட்டம் இந்த முரண்பாடுகளைத் தீர்க்க உதவியாக அமைந்தது. இதன் மூலம் கல்விப் பணிப்பாளர் ஆளுநருக்குக் கீழ்ப்பட்டவராக அல்லாமல் அமைச்சருக்கும் நிறைவேற்றுக் குழுவூக்கும் கீழ்ப்பட்டவராகவே செயற்படவேண்டும் என்ற நியதியை அது வகுத்தது.
அத்துடன் இச்சட்டம் கட்டாய கல்வி வயதெல்லை ஒன்றை நியமித்து 6 வயது முதல் 14 வயது வரையான பிள்ளைகளை இதன் மூலம் கட்டாயம் பாடசாலை செல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது. இந்த 1939 கட்டளைச் சட்டம் தொடக்கம் மக்கள் பிரதிநிதிகளில் இருந்தே கல்வி அமைச்சரும் ஆளுநர் நியமித்த பணிப்பாளரும் கல்விச்சபைக்கு வழங்கப்பட்ட மேற்பட்ட அதிகாரம் சுயமாக செயற்பட வழிசெய்தது.
அதனைத் தொடர்ந்து 1943இல் கல்வி பற்றிய சிறப்புக் குழு சில விதர்ப்புரைகள் முன்வைத்தது. இது 1865ல் மோர்கன் குழுவூக்கும் 1931ல் அரசியல் மாற்றங்கள் என்பவற்றின் பின்னர் இலங்கை கல்வி முறைபற்றிய ஆய்வை மேற்கொண்ட குழு இந்த சிறப்புக் குழுவாகும். இக்குழு முக்கியமான பின்வரும் பிரச்சினைகளை ஆய்வூக்குற்படுத்தியது
1. சுதேச மொழிக்கல்வி பயின்ற குழுக்களின் சமூக பாதிப்புகள்
2. கல்வியில் சமவாய்ப்பு இல்லாமல் பணம் செலவிட முடியூமான ஆற்றலே அவ்வாய்ப்பை தீர்மானித்து.
3. கட்டாயக் கல்வி நிலை.
4. தேர்வூகளின் ஆதிக்கம்.
துபோன்ற பிரச்சினைகளை ஆய்வூக்குற்படுத்தி அதற்கு பல தீர்வூகளை இந்த விதர்ப்புக்குழு முன்வைத்து இதில்,
பாடசாலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் இதனால் முதக்குழுக்களின் உதவிபெறும் பாடசாலைகள் அரச பாடசாலைகள் ஒருங்கே செயற்பட வழிசெய்தல் என்றாலும் மதபாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு சில நிபந்தனைகளை உருவாக்கின.
பாடசாலைகளில் சமயம் போதிக்கப்படல் தொடர்பான விடயத்தில் ஒரு சமயத்தை ஏற்காதவர்களுக்கு அந்த சமயப் போதனை வழங்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்தல். அரச பாடசாலைகளின் சமயசார்பின்மை மாறி அங்கும் மதப் போதனைகள் நடைபெறயாயிற்று.
பாடசாலைகளில் கற்பித்தல் ஊடக மொழி விடயத்தில் தாய் மொழியே பிரதான கற்பித்தல் மொழியாக இருக்க வேண்டும் என்று இது தீர்மானித்தது. தொடக்க நிலை பாடசாலைகளில் மொழி விருப்பத்துக்குறியதாக அமைத்தது. அதே நேரம் ஆரம்பப் பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை கல்வி இலசவமாக்கப்பட வேண்டும் என்று கூறியதுடன் உதவி பெறும் பாடசாலைகளும் இத்திட்டத்தில் இணைந்துகொள் முடியூம் என்றும் கூறியது. இவற்றுக்கு தகுதியூள்ள ஆசிரியர்களை அரசு வழங்குவதுடன் அவர்களுக்கு சம்பளத்தையூம் அரசே வழங்க முடிவாகியது. அதே சமயம் பாடசாலைகளுக்கு எந்த கட்டணங்களையூம் பெறமுடியாது வசதிக்கட்டணம் தவிர. வறிய மாணவர்களுக்கு விடுதி வசதி உணவூ வசதிகளையூம் வழங்க விதர்ப்புரைக்குழு தீர்மானம் செய்தது.
அதேபோன்று பாடசாலை ஒழுங்கமைப்புகளையூம் விதர்ப்புரைக்குழு அமைத்தது. இங்கு இடைநிலைப் பாடசாலைகளை பல்சீரமைப்பு கொண்டதாக ஒழுங்குபடுத்த ஆலோசனை வழங்கியது. இதனூடாக தாய் மொழியை பயிற்று மொழிகாக் கொண்ட அனைத்து பாடசாலைகளிளும் கலைத்திட்டம் பொதுவானதாக பின்பற்றப்பட அறிவூறுத்தியது.
அதேநேரம் குறிப்பிட்ட வயதில் தாய்மொழிஇ எண்கணிதம் பொதுவிவேகம் ஆகிய பாடங்களில் பரீட்சை நடாத்தி அதன் புள்ளிகளுக்கு ஏற்ப மூன்று வகையான கற்கைகளுக்கு தெரிவூ செய்யப்படுவர். இதில் உயர் 5 சதவிதத்தினர் பல்கலைக்கழகம் புகும் வரை கல்வி கற்பிக்கப்படுவர். அடுத் 15 சதவீதத்தினர் சிரேஷ்ட பாடசாலைகளில் வணிகம் தொழில் முறைக் கல்வி என்பவற்றைக் கற்பர். மீதமுள்ளோர் தொழிற் பயிற்சி பாடசாலைகளில் விவசாயம்இ சிறு வனிகம் போன்ற துறைகளில் கற்பிக்கப்படுவர்.
இந்த வகையில் அரசசபை காலத்தில் உருவாக்கப்பட்ட கல்விக் குழுக்கள் தமது காலத்து பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்காக தீர்வூகளை முன்வைத்த இலங்கையில் சகலருக்குமான கல்வி வாய்பினை ஏற்படுத்திக் கொடுத்து.