Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Friday, April 27, 2012

பிள்ளை நடத்தை முறைகளை விளங்கிக் கொள்வதற்கு உதவூம் பரிசோதனைசார் முறைக்கும் பரிசோதனைசாரா முறைக்கும் இடையிலான மூன்று வேறுபாடுகளை பரிசீலிக்குக.

கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை வெற்றிகரமாதொரு செயற்பாடாக அமைத்துக் கொள்வதற்கு அல்லது ஆசிரியர் எதிர்பார்த்த நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு ஆசிரியரானவர் மாணவர் குறித்து போதியளவூ அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவைப் பெற்றுக் கொள்வதற்குஇ மாணவரது நடத்தை பற்றிய அறிவினைப் பெற்றுக்கொள்வதற்கு  உளவியலில் இரண்ட வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
1. பரிசோதனை சார் முறை
2. பரிசோதனை சாரா முறை
எனினும் இந்த முறைகளை குறித்து அறியூம்போது அதன் வேறுபாடுகள் மிக முக்கியமானதாகும். அத்தகைய வேறுபாடுகளை அவதானிக்கும் பேHது பின்வருவனவற்றை கருதமுடியூம்.

ஆய்வுகூட முறை பின்பற்றப்படல்.
ஆய்வூகூட முறையில் நடமாகடக் கூடிய உயிரினங்களை வைப்பது என்பது மிகவூம் சிரமமானதாகும். அதுவூம் மனித இனத்தில் மாணவர்களை ஒரு இடத்தில் கட்டுப்படுத்திவைப்பது சாத்தியமற்றகவே காணப்படுகின்றது. இவ்வாறு கட்டுப்படுத்தி வைக்காமல் ஆய்வூகூடப்பரிசோதனைகளை சரியாக செயற்படுத்த முடியாது. மறுபுறம் பரிசோதனை முறை சாராத விடயத்தில் ஆய்வூகூடப் பிரச்சினை எழுவதில்லை அதனால் ஆய்வூ செய்யூம் மாணவனை அவரது இயல்பான நிலையில் வைத்தே ஆய்வூ செய்ய முடிகின்றது.  எனினும் இங்கு அவதானிப்பவர்கள் தங்களது விருப்பு வெறுப்புக்களையூம் சேர்த்துவிடும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது

சரியான பூரணமான தீர்வுகளைப் பெறுவது.
பரிசீலிக்கப்படும் நபர் கட்டுப்படுத்தப்படுவதனால் அவரிடம் இருந்து சரியான முடிவுகளை பெறுவது சாத்தியமற்றதொன்றாகும். இவ்வாறு பெறப்படும் முடிவு நிர்ப்பந்திக்கப்பட்டு எடுக்கப்பட்டதாகவே இருக்கும். சரியான பூரணமான விடயத்தைக் பெறுவதானால் அங்கு இயல்பு நிலை பேனப்படுவது அவசியம் என்பது சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ஒரு அம்சமாகும். ஆனாலும் மனிதனை ஒரு வரையரைக்குள் கட்டுப்படுத்திவைப்பது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. எனினும் பரிசோதனைசார் முறைமூலம் நன்கு திட்டமிட்ட பரிசோதனைகள் மூலம் காரணகாரிய தொடர்பை இலகுவாக இனங்காணலாம். அதே போன்று பரிசோதனைசார் முறையில் காணப்படும் மிக முக்கியமான விடயம் இந்த முடிவூகளை இன்னொருவர் கூட சரிபார்க்க முடியூமான இருக்கின்றது என்பது.

துல்லிமான முடிவூகளுக்கு ஆய்வூகூடம்.
 ஒரு விடயம் குறித்த முடிகளை துல்லியமாகப் பெறுவது என்றால் அங்கு முழுநேரக் கண்காணிப்பு இருப்பது. ஆத்துடன் இங்கு நேரம் மற்றும் பணம் என்பன சிக்கனப்படுத்தப்படுகின்றன. மீண்டும் மீண்டும் அசதானிக்க முடியூமாக இருப்பது இதன் நம்பிக்கைத்தன்மையை மேலும் அதிகமாக்குகின்றது. அவசியமாகும். இதற்கு பெரிதும் துணைபுரிவது பரிசோதனைசார் ஆய்வூகளாகும். ஏனினும் இதனை பரிசோதனை சாரா முறையில் காணாமுடியாது காரணம் அங்கு ஆய்வூகூடகக்கண்காணிப்பு என்பது இல்லாதாகும். இதனால் பரிசோதனை சாரா முறையில் பெறப்படும் முடிவூகள் பெரும்பாலும் அனுமானங்களாக அல்லது கிட்டிய முடிவூகளாவே தவிர இருக்காது.


உசாத்துணைகள்:


 1.     கல்விச் சஞ்சிகை - தேசிய கல்விக் கழகம் (விஷேட  இதழ்) – 1984
 2.    பாரம்பரையும் சூழலும் - தேசிய கல்வி நிறுவகம் - 1991
 3.     கல்வியியல் கட்டுரைகள் - தேசிய கல்வி நிறுவகம் -2005

No comments:

Post a Comment