Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Wednesday, December 12, 2012

‘வளர்ச்சிக்கும் விருத்திக்குமான உரிமையானது பிள்ளைகளுக்குறிய உரிமைகளுள் ஒன்றாகும்’

diploma_in_education_Tamil

     இதனை இங்கிருந்து ஆரம்பிக்கலாம் சிலியின் நோபல் பரிசுக்குறிய காரெய்லா மிஸ்ட்ரால் சிறுவர்களின் வளர்ச்சி விருத்தி பற்றி கூறும் கூற்று இதனை மிகவூம் தெளிவாக்க காட்டக் கூடியதாகும். அவர் ‘எமக்குத் தேவைப்படும் பல பொருள்களைத் தாமதிக்கலாம். ஆனால் பிள்ளைகளுக்கு அவ்வாறு நடக்க முடியாது. அப்பிள்ளைகளின் எலும்புகள் உருப்படுகின்றன. குருதி ஆக்கப்படுகின்றது. புலன் உறுப்புக்கள் விருத்தியாகின்றன. இவ்வாறான தகுந்த நேரத்தில் நாளை எனக் காலம் தாழ்த்த முடியாது. அவருடைய நாமம் இன்று’ என்று குறிப்பிடுகின்றதன். ஆழம்தான் என்ன.
சிறுவர் என்ற வயதெல்லையைப் பொருத்தவரை அவர்கள் அனைத்து பகுதிகளினாலும் வளர்ச்சியூம் விருத்தியூம் அடைந்து கொண்டிருப்பவர்கள். ஒரு வளர்ச்சி விருத்தி நடைபெறுகின்றது என்றால் அங்கு அதற்குத் தேவையான அனைத்தும் போதியளவூ கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாத போது அது வளர்ச்சியடையாது அல்லது வளர்ச்சி சரியானதாக இருக்காது.
ஆனாலும் மனிதர்களைப் பொருத்தவரை அவர்கள் உடலால் மட்டும் வளர்ச்சியடைபவர்கள் அல்லர். அதிலும் சிறுவர்களைப் பார்க்கும் போது அவர்கள் மனஎழுச்சி விருத்தி, மொழி விருத்தி, உள இயக்கத் திறன்கள், ஆக்கத் திறன்கள், ஆளுமை, சமூகவிருத்தி என பலகோணங்களிலும் வளர்ச்சியூம் விருத்தியூம் அடைகின்றனர்.
சிறுவர்கள் வளர்ச்சியின் ஆரம்ப ஊற்றுக்கள். இந்த இளங்கன்றுகளின் பூரண விருத்தியின் அத்திவாரம் சுகாதாரமும், உடலியல் விருத்தியூமாகும். எனவே தகுந்த ஊட்டச்சத்துக்கள் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். அவை அந்ததந்த வளர்ச்சிக்கட்டத்துக்கு தகுந்தாட்போல் போதியளவில் கிடைக்கச் செய்யவேண்டும். அத்துடன் சரியான சுகாதார வசதிகளையூம், சுகாதார பழக்கவழக்கங்களையூம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். இல்லாதபோது அவர்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதன் காரணமாக நோய்கள் அவசரமாக தொற்றக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. இவற்றின் மூலம் பிள்ளைகள் அனைவருக்கும் அனைத்து சுகாதார வசதிகளையூம் கிடைக்கச் செய்யவேண்டும்.
அதே போன்று இன்னும் பார்க்கும் போது உடலியல் விருத்திக்கான சவதிகளுடன் பிள்ளையானது தனது அறிவூ, உடலியக்கம், மனவெழுச்சி போன்ற வற்றின் விருத்தியில் உச்ச நிலையை அடைவதற்கு தகுதியான சூழல் வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். பிள்ளை நன்றான இயங்கக் கூடிய வயது சிறு காலப்பகுதியாகும். இக்காலத்தில் அதிகம் இயங்குவதன் மூலம் இரத்த நலங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் சீராக அமைவதற்கு காரணமாவதுடன் சுவாச சுற்றௌட்டமும் சீராக வேலைசெய்வதற்கு பிள்ளைகளது உடலியக்கம் தான் காரணமாக அமைகின்றது. அதே நேரம் மனவெழுச்சி விருத்திக்கான வழிகள் சரியாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். இவற்றுக்காக வேண்டி சிறுவர் பிராயத்தில் முறைசார்ந்த முறை சாராத கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இக்காலத்தில் இவர்களுக்கு விஷேடமாக உடலின் பருமன், தராதரம், பண்பு என்பவற்றின் வரிசையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை ஒரு ஒழுங்கில் வரிசையான ஏற்படுகின்றன. இங்கு ஆண்பிள்ளைகள் உயரத்தில் கூடியவர்களாகவூம் பெண்பிள்ளைகள் அகன்ற தன்மையையூம் பெறுகின்றனர். அதேபோன்று இந்த காலத்தில் சிறுவர்களது உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் பல் காரணிகளை கண்டு கொள்ள முடியூம். அவற்றில் போதிய ஊட்டச்சத்துக்கள் அற்ற உணவூ இவர்களது வளர்ச்சியில் விகாரங்களை ஏற்படுத்துகின்றன. குறைவான நிறையினால் அந்த வயதுக்குறிய வளர்ச்சியை பெறமுடியாது போகின்றதுடன் போசாக்கின்மை நோய்களை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்களினால் சிறுவர்களது உடல் பலவீனமாவதுடன் ஆளுமை குன்றிவிடுகின்றன.
diploma_in_education_Tamil
இந்த காலத்தில் மனித மூலையின் 80 வீதம் வளர்ச்சியடையக் கூடிய காலமாகும். இங்கு அறிவூ என்கின்ற அம்சம் மிகவூம் பிரதானமாகதாகும். இந்த அறிவூ என்பது உள்ளார்ந்த செயற்பாடாகும். இதனால் மனிதன் தெரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுகின்றான், நினைவூ கூர்தல், விளங்கிக் கொள்ளுதல், தொடர்பு காணுதல், வகுத்துப் பார்த்தல், தொகுத்தாராய்தல், கற்பனை செய்தல், பிரச்சினைகளை தீர்த்தல், பல்வேறு ஆக்கச் செயல்களை செய்தல் என அவனது அறிவூ விரிந்து செல்லும் காலமாகும். இதன் போது அவனிடத்தில் அறிவூ அல்லது உள விருத்தி என்கின்ற அம்சம் சரியாக வளங்கப்பட்டிருக்க வேண்டும். பியாஜேயூம் இக்ககாலத்தின் சிறுவர்களின் அறிவூ வளர்ச்சி குறித்து நான்கு நிலைகளை சுட்டிக் காட்டுகின்றார்.
சிறுவர்களின் ஆரம்ப காலங்களிலே மொழி ஆற்றல் துரிதமாக வளர்ச்சியடையக் கூடியதாகக் காணப்படுகின்றது. இந்த ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்குறிய சிறந்த சூழல் அவர்களுக்குக் கிடைக்கும் போது மொழிஆற்றலை தாமாகவே பெற்றுக் கொள்வார்கள். இதற்கு இவர்களின் வீடுகளில் நிகழும் தொடர்பாடல் மிகவூம் முக்கியமானதாகும். அதே போன்று வயது வளர பாடசாலைகளில், தொடர்பாடல் ஊடகங்களின் செல்வாக்கினாலும் அவர்களிடம் மொழி ஆற்றல் மேலும் வளர்வதற்கு அது காரணமாகின்றது.
எனவே சிறுவர்கள் என்பவர்கள் அவர்கள் வேகமான வளர்ச்சி கொண்டவர்கள். அவர்களது வளர்ச்சிக்கு ஏற்ப அவர்கள் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பர். இதனை பெரியவர்கள் கட்டுப்பாடுகள் இட்டு தடுக்க முறியடிக்க முயலக்கூடாது. பிள்ளைகளது ஆக்கத்திறன் விருத்தி, ஆளுமை விருத்தி, விளையாட்டு, ஓய்வூ என்கின்ற அனைத்தையூம் அப்பிள்ளை பெற்றுக்கொள்வதே வளர்ச்சியாகும்.
இக்காலம் பெரியவர்களை காட்டிலும் சிறுவர்கள் என்கின்ற வயதியருக்கே உரித்தானதாகும் என்பது இங்கு பேசப்பட்ட விடயங்களில் இருந்து மிகத் தௌpவாக் அறிந்து கொள்ளமுடிகின்றது.

1948 – 1977 காலப்பகுதியில் உயர் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் கல்வி நிர்வாகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள்

diploma_in_education_ Tamil

    இலங்கை சுதந்திரத்துக்கு முன்னர் இடைநிலைக்குப் பிற்பட்ட கல்வித்துறையில் ஓரளவூக்கு முன்னேற்றம் காணப்பட்டிருந்ததெனினும், 1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரே போதியளவான, உண்மையான கல்விக்கோரிககைகள் விடுக்கப்பட்டதனை அவதானிக் முடிகின்றது. சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டின் அனைத்துத் துறைக்கும் நாட்டு மக்களையே நம்பியிருக்க வேண்டி எற்பட்டதாலும். பல்துறை நிபுணர்களை உருவாக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது. என்றாலும் இதனை பல்கலைக்கழகத்தால மட்டும் நிறைவூ செய்ய முடியாத நிலை தோன்றவே அதனை ஈடுசெய்வதற்கு பல்வேறு வகையான கல்வி வழங்கள்களின் தேவைதோன்றியது இதன் போது உயர் கல்வியோடு ஆசிரியர் கல்வி மற்றும் கல்வி நிறுவாகம் மற்றும் தொழில்னுட்பக் கல்வி போன்றன வளர்ச்சியடைந்தது.
உயர் கல்வி என்பது 1942ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஆரம்பித்தது முதல் அதன் வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. இந்த வகையில் 1950இல் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை கல்வி, விஞ்ஞானம், மருத்துவம், சட்டம்,  விவசாயம்,  மிருக வைத்தியம் என்றும் ஆறு பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 1952இல் கலைத்துறை மற்றும் கீலைத்தேய கல்வித்துறை என்பன மாத்திரமே பேராதனை பல்கலையில் இருந்தது பின்னர் 1961இல் விஞ்ஞான பீடமும் அடுத்து மருத்துவ பீடமும் ஆரம்பிக்கப்பட்டன.
1960இன் பின்னர் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் பயில்வதற்காக கலைப்பீடத்துக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 1958இன் பின்னர் வித்தியோதயஇ வித்தியாலங்காரப் பிரிவினைகளுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. தேவையூம் அழுத்தமும் அதிகரித்தன் காரணமாக 1962இல் கொழும்பில் இரண்டாவது கலைப்பீடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.  இதனை அடுத்து கொழும்பு பல்கலைக்கழகம் தன்னாட்சியூள்ள பல்கலையாக உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து 1966 களின் பின்னர் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் சேர்க்கும் அளவில் வரம்பு அமைக்கப்பட்டது அதிகமாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு சேர்வதில் தடை ஏற்படுத்தப்பட்ட போட்டிநிலை உருவாக்கப்பட்டது.
1971இல் ஜயரட்ன குழுவினது சிபாரிசுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களினது கணிப்பு நிலையை ஏற்றத்தாழ்வில்லாத நிலையை ஏற்படுத்தியதுடன் 1972இல் ஒரு துணைவேந்தரையூம் மேல்நிலை ஆட்சிக்குழுவையூம் ஏற்படுத்தி அதன் மூலம் அது நிர்வகிக்கப்பட்டது. அதேபோன்று பல்கழைக்கலைத் திட்டத்தில் வேலை மற்றும் தொழில் சார்பான கற்கை நெறிகள் புகுத்தப்பட்டன. அத்துடன் காலி. யாழ்பாணம், கண்டி, தெகிவளை ஆகிய இடங்களில் பல்தொழிநுட்பக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. ஆவற்றில் மூன்றாம் நிலை கல்வி நெறிகளும், தொழிற் பயிற்சி நெறிகளும் புகுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த பயிற்சி நிலையங்கள் கனி~;ட பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தப்பட்டன. இந்த வகையில் காலத்துக்குக் காலம் உயர் கல்விதுறை பல்வேறு மாற்றங்களுக்கும் உற்பட்டு வந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
அதேபோன்று ஒரு சமூகத்தின், நாட்டின் முதுகெழும்பாக இருக்கும் ஆசிரியர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளது. இந்த மாற்றம் கட்டாயம் நிகழவேண்டிய ஒன்றாகும் ஏனெனில் கல்வி கொள்கை வகுப்பாளர்கள் எத்தகைய கொள்கைகயை வகுத்த போதும் அதனை நடைமுறைப்படுத்துபவர்கள் ஆசிரியர்களாக இருப்பவர்களே.
இந்த வகையில் 1947 கன்னங்கர சீர்திருத்தங்கள் காரணமாக கல்வி முறைமை விரிவடைந்து முக்கிய பாடங்களின் ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்தது. இதனால் இத்தகைய ஆசிரியர்களுக்கான விஷேட கல்வி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டன 1953 விஞ்ஞHனத்துக்கும், 1954 இல் கணிதத்துக்கும், 1955இல் தொழிற்பாடங்களும், 1956இல் ஆங்கிளத்துக்கும் என்று பல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1958 முதல் ஆசிரியர்கள் இப்பயிற்சி நெறிகளில் சேர்வதற்கான தகைமைகள் உயர்த்தப்பட்டன. இதன் போது ஆசிரியர்களுக்கு முழுச் சம்பளத்துடனும், லீவூடனும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
1953இ 1954 களில் கொழும்புத்திட்டத்தின் உதவிகளைப் பெற்று கைப்பணித்துறையில் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் நியூஸிலாந்துக்கு அனுப்பி பயிற்சி அளிக்கப்பட்டனர். 1957 களில் நஃபீல்ட் கருத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அதனுடாக பயிற்றப்பட்ட ஆசிரியர்களை வழங்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
1960ஆம் ஆண்டிலிருந்து மதப்பிரிவினர் நடாத்திய உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை விஷேட சட்டத்தின் மூலம் அரசு பொறுப்பேற்றது முக்கிய ஒரு நிகழ்வாகும். தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு இணங்க வித்தியோதய வித்தியலங்கார மற்றும் பல்கலைக்கழகங்களிடம் ஆசிரியர் பயிற்சி பொறுப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தொழிலுக்குறிய முன்பயிற்சி வழங்குவதற்காக பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்விமானி கற்கை நெறி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்படும் பயிற்சி நெறிகள், கல்விக் கல்லூரிகள் என்பவற்றை ஆராய்ந்து அதனது குறைநிறைகளை கவனிக்க வேண்டி ஏற்பட்டதன் விளைவாக 1965இல் ஆசிரியர் கல்விக் கல்லூரிகளின் கட்டமைப்பு, பயிற்சி வழங்கும் முறைஇ நுழைவூத்தகைமை என்பவற்றை ஆராயூம் பொறுட்டு விஷேட குழு ஒன்று இஸ்தாபிக்கப்பட்டது. 1945இல் 25501 ஆக இருந்த ஆசிரியர் எண்ணிககை 1975 ஆகும் போது 104043ஆக அதிகரித்தது. இவ்வாறு ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது இக்கல்விக் கல்லூரிகள் போதாமை காரணமாக கல்விக் கல்லூரிகள் அதிகரிக்கப்பட்டன.
1967களில் ஆசிரியர்களில் 57 சதவீதத்தினர் எத்தகைய பயிற்சிகளையூம் பெறாதவர்களாகவே இருந்தனர். இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு கல்விப்பணியின் நிர்வாக பகுதிகளை நிறைவேற்ற 1966இல் கல்வி அமைச்;சில் கல்விப்பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் 1972 ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக கல்விக்கல்லூரிகளின் துணையூடன் தபால் மூலம் பயிற்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி நெறி ஏற்பனவே இலங்கைப் பல்கலையால் பட்டதாரி ஆசிரியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 1975இல் ஆசிரியர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கில் பேராதனை, வித்தியாலங்கார, வித்தியோதயஇ,கொழும்புப் பல்கலை வளாகங்களில் உள்ள கல்வித்துறைகளை இணைத்து கல்விப்பீடம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கல்விமாணி தொடக்கம் கலாநிதிப்பட்டம் வரையான பயிற்சி நெறிகளை அது வழங்கியது.
1975களின் பின்னர் நுண்கற்பித்தல்இ அணிமுறை கற்பித்தல், பாவனை நடிப்பு, புதிய எண்ணக்கரு கற்பித்தல் போன்ற பல கற்பித்தற் பரிசோதனைகளாக ஆசிரியர் பயிற்சி மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன. இங்கு 13 பாடத்துறைகள் சிறப்பு தேர்ச்சிக்காக இணைக்கப்பட்டன.
இன்று வரையூம் மிகவூம் சிறப்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை பல ஆசிரியர் பயிற்சி பாசறைகள் வழங்கிவருவதுடன். தேசிய கல்வி நிறுவகத்தின் வழிகாட்டலில் டிப்ளோமா பயிற்சி நெறிகள் ஆரம்பிக்ப்பட்டுள்ளன. அதே போன்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மூலம் இன்னும் சிறப்பாக நவீனமயப்படுத்தப்பட்ட முறையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிகளை இவை வழங்கி ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக வழிவகைகளை செய்துவருகின்றது.
இவ்வாறன பல மாற்றங்கள் பல்வேறு துறைகளில் நிகழ்ந்து வருகின்ற வேலையில் கல்வி நிறுவாகத் துறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. ஆரம்பமாக பாடசாலைகளினதும் ஆசிரியர்களினதும் அதுசார்ந்த ஏனைய விடயங்களினதும் தேவை, எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகவூம் 1960களில் உதவி பெறும் பாடசாலைகளையூம் தன்னுடன் அரசு இணைத்துக் கொண்டதன் காரணமாகவூம் கல்வித்துறைக்கு சுமை அதிகரித்தது தனியாக நின்று முழுவதனையூம் கவனிப்பது அசாத்தியமாகியது. இதன் விளைவாக நிர்வாகம் பரவளாக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது. இதனைய கல்வி நிறுவாகம் என்கின்றௌம்.
1961 முதலாவது நிர்வாகப் பரவலாக்கல் மாநாடு பண்டாரவலையில் ஏற்பாடுசெய்யப்பட்டதன் விளைவாக அதே வருடம் ஒக்டோபர் மாதம் நிர்வாகப் பரவலாக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் போது 10 பிராந்தியங்களில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் அவற்றுக்குட்பட்ட 13 பிரதேசங்கள் கல்வி அதிகாரிகளின் நிருவாகத்தின் கட்டுப்பாட்டிலும் அமைக்கப்பட்டன.
1966இல் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் கல்வி அமைச்சு அடுத்து பிரதி கல்வி அமைச்சர் அடுத்து கல்வி செயலாளரும் பணிப்பாளரும் அதனை அடுத்து பிதிப் பணிப்பாளர்கள் அடுத்து ஆரம்பஇ இடைநிலை, தொழிநுட்ப கல்வித் துறைகள் என்ற வழிமுறை அமைக்கப்பட்டது. 1967இல் 14 ஆக இருந்து கல்வி பிரந்தியத் திணைக்களங்கள் 15 ஆக உயர்ந்தது. இது 1971 ஆகும் போது 24ஆக அதிகரித்தது.
முகாமைத்துவ மறுசீரமைப்புக் குழு பாடசாலைமட்ட, முகாமைத்துவ நிருவாக முறைமை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக தனது பரிந்துரைகளை முன்வைத்தது. தேசிய கல்வி நிறுவகம் கலைத்திட்ட மேம்பாட்டில் கவனம் செலுத்தியதுடன், பயிற்றுவிப்பதிலும் தொடர்புபட்டிருந்தது. பொது நிர்வாக ஆணைக்குழு போன்று கல்வி சேவைக்குழு ஒன்றும் முகாமைத்துவ தரமேம்பாட்டை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு கல்வி வயய அலுவலகமும் கல்வி நிருவாகம்இ கல்வி அபிவிருத்தி, பொது நிர்வாகம், நிதி, பாடசாலை செயற்பாடுகள் என 5 பிரிவூகளைக் கொண்டதாக  உருவாக்கப்பட்டதுடன் பிராந்தியப் பணிப்பாளர் அப்பிரதேசத்தின் கல்வி விருத்தி முகாமைத்துவத்தற்கு பொறுப்பாக காணப்பட்டார். இவ்வாறாக பல மாற்றங்கள் காலத்துக்குக் காலம் ஏற்பட்டு வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அரசாங்கசபை காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் சுருக்க விளக்கம்

diploma_in_education_ Tamil

     இலங்கையை ஆண்டுவந்த கடைசி ஐரோப்பியர்களான பிரித்தானியரின் ஆயுற்காலம் முடிவடைந்து வருகின்ற காலத்தில் இலங்கை ஓரளவுக்கு இறைமை பெறத்தக்க அரசுரிமை நாடு என்னும் அந்தஸ்து 1931இல் கிடைத்தது. இதனால் சட்டமாக்கும் அதிகாரம் அதனை நிறைவேற்றும் கடமையும் அரச சபைக்கு வாய்த்தது. அதனைப் பயன்படுத்தி திரு. கன்னங்கர அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கல்வி பற்றிய சட்டங்களை இயற்றி வந்தது. இந்த அடிப்படையில்,
ஆரம்பத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நிறைவேற்றுக் கல்விக் குழுவூக்கு இணையானதாக ஆளுனருக்குப் பொறுப்பான பிரதம நிறைவேற்று அதிகாரியான கல்விப் பணிப்பாளர் இருந்தார். இவை இரண்டும் இணைந்து செல்லாத நிலை காணப்பட்டது. இதில் திருப்தி கொள்ளாததால் 1939 ஆம் ஆண்டு கல்வி பற்றிய கட்டளைச் சட்டம் இந்த முரண்பாடுகளைத் தீர்க்க உதவியாக அமைந்தது. இதன் மூலம் கல்விப் பணிப்பாளர் ஆளுநருக்குக் கீழ்ப்பட்டவராக அல்லாமல் அமைச்சருக்கும் நிறைவேற்றுக் குழுவூக்கும் கீழ்ப்பட்டவராகவே செயற்படவேண்டும் என்ற நியதியை அது வகுத்தது.
அத்துடன் இச்சட்டம் கட்டாய கல்வி வயதெல்லை ஒன்றை நியமித்து 6 வயது முதல் 14 வயது வரையான பிள்ளைகளை இதன் மூலம் கட்டாயம் பாடசாலை செல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது. இந்த 1939 கட்டளைச் சட்டம் தொடக்கம் மக்கள் பிரதிநிதிகளில் இருந்தே கல்வி அமைச்சரும் ஆளுநர் நியமித்த பணிப்பாளரும் கல்விச்சபைக்கு வழங்கப்பட்ட மேற்பட்ட அதிகாரம் சுயமாக செயற்பட வழிசெய்தது.
அதனைத் தொடர்ந்து 1943இல் கல்வி பற்றிய சிறப்புக் குழு சில விதர்ப்புரைகள் முன்வைத்தது. இது 1865ல் மோர்கன் குழுவூக்கும் 1931ல் அரசியல் மாற்றங்கள் என்பவற்றின் பின்னர் இலங்கை கல்வி முறைபற்றிய ஆய்வை மேற்கொண்ட குழு இந்த சிறப்புக் குழுவாகும். இக்குழு முக்கியமான பின்வரும் பிரச்சினைகளை ஆய்வூக்குற்படுத்தியது
1. சுதேச மொழிக்கல்வி பயின்ற குழுக்களின் சமூக பாதிப்புகள்
2. கல்வியில் சமவாய்ப்பு இல்லாமல் பணம் செலவிட முடியூமான ஆற்றலே அவ்வாய்ப்பை தீர்மானித்து.
3. கட்டாயக் கல்வி நிலை.
4. தேர்வூகளின் ஆதிக்கம்.
துபோன்ற பிரச்சினைகளை ஆய்வூக்குற்படுத்தி அதற்கு பல தீர்வூகளை இந்த விதர்ப்புக்குழு முன்வைத்து இதில்,
பாடசாலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் இதனால் முதக்குழுக்களின் உதவிபெறும் பாடசாலைகள் அரச பாடசாலைகள் ஒருங்கே செயற்பட வழிசெய்தல் என்றாலும் மதபாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு சில நிபந்தனைகளை உருவாக்கின.
பாடசாலைகளில் சமயம் போதிக்கப்படல் தொடர்பான விடயத்தில் ஒரு சமயத்தை ஏற்காதவர்களுக்கு அந்த சமயப் போதனை வழங்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்தல். அரச பாடசாலைகளின் சமயசார்பின்மை மாறி அங்கும் மதப் போதனைகள் நடைபெறயாயிற்று.
பாடசாலைகளில் கற்பித்தல் ஊடக மொழி விடயத்தில் தாய் மொழியே பிரதான கற்பித்தல் மொழியாக இருக்க வேண்டும் என்று இது தீர்மானித்தது. தொடக்க நிலை பாடசாலைகளில் மொழி விருப்பத்துக்குறியதாக அமைத்தது. அதே நேரம் ஆரம்பப் பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை கல்வி இலசவமாக்கப்பட வேண்டும் என்று கூறியதுடன் உதவி பெறும் பாடசாலைகளும் இத்திட்டத்தில் இணைந்துகொள் முடியூம் என்றும் கூறியது. இவற்றுக்கு தகுதியூள்ள ஆசிரியர்களை அரசு வழங்குவதுடன் அவர்களுக்கு சம்பளத்தையூம் அரசே வழங்க முடிவாகியது. அதே சமயம் பாடசாலைகளுக்கு எந்த கட்டணங்களையூம் பெறமுடியாது வசதிக்கட்டணம் தவிர. வறிய மாணவர்களுக்கு விடுதி வசதி உணவூ வசதிகளையூம் வழங்க விதர்ப்புரைக்குழு தீர்மானம் செய்தது.
அதேபோன்று பாடசாலை ஒழுங்கமைப்புகளையூம் விதர்ப்புரைக்குழு அமைத்தது. இங்கு இடைநிலைப் பாடசாலைகளை பல்சீரமைப்பு கொண்டதாக ஒழுங்குபடுத்த ஆலோசனை வழங்கியது. இதனூடாக தாய் மொழியை பயிற்று மொழிகாக் கொண்ட அனைத்து பாடசாலைகளிளும் கலைத்திட்டம் பொதுவானதாக பின்பற்றப்பட அறிவூறுத்தியது.
அதேநேரம் குறிப்பிட்ட வயதில் தாய்மொழிஇ எண்கணிதம் பொதுவிவேகம் ஆகிய பாடங்களில் பரீட்சை நடாத்தி அதன் புள்ளிகளுக்கு ஏற்ப மூன்று வகையான கற்கைகளுக்கு தெரிவூ செய்யப்படுவர். இதில் உயர் 5 சதவிதத்தினர் பல்கலைக்கழகம் புகும் வரை கல்வி கற்பிக்கப்படுவர். அடுத் 15 சதவீதத்தினர் சிரேஷ்ட பாடசாலைகளில் வணிகம் தொழில் முறைக் கல்வி என்பவற்றைக் கற்பர். மீதமுள்ளோர் தொழிற் பயிற்சி பாடசாலைகளில் விவசாயம்இ சிறு வனிகம் போன்ற துறைகளில் கற்பிக்கப்படுவர்.
இந்த வகையில் அரசசபை காலத்தில் உருவாக்கப்பட்ட கல்விக் குழுக்கள் தமது காலத்து பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்காக தீர்வூகளை முன்வைத்த இலங்கையில் சகலருக்குமான கல்வி வாய்பினை ஏற்படுத்திக் கொடுத்து.

Friday, November 9, 2012

சமூகமயமாக்கல் செயன்முறையின் குடும்பத்தின் வகிபாகத்தை நான்கு உதாரணங்களை எடுத்துக் கூறுவதனூடாக விவரிக்குக.


Socialization

குழந்தையை சமூகத்துக்குறிய வளர்ந்த ஒருவராக்குவதற்கு சமூகத்துக்குறிய வளர்ந்த ஒருவராக்குவதற்கு அப்பிள்ளைக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய அன்பு செலுத்தக்கூடிய, தண்டனை வழங்கக்கூடிய எல்லா சமூக்க குழுக்களும் சமூகமயமாக்கல் கருவிகள் எனப்படும். இவற்றுல் முதன்மையானது குடும்பமாகும். தனியால் ஒருவர் முதலில் அங்கத்துவம் பெறும் நிறுவனம் குடும்பமாகும். பாடசாலை செல்லும் வயது வரை ஒரு பிள்ளை தனது முழு நாளையும் குடும்பத்திலே கழிக்கின்றது. அதனால் இக்காலப்பகுதியில் அப்பிள்ளை குடும்ப அங்கத்தவரின் உறவின் அடிப்படையிலே சமூக இணக்கம் பெறுகின்றது. வேறு எந்த சமூக நிறுவனங்களை விடவும் குடும்பத்தில் நிலவும் உறவு அந்நியோன்யமானதும், நெருங்கியதுமாகும்.

சிறுபிள்ளையொன்று முதன் முதலில் தன்னுடைய மொழியை கற்றுக்கொள்வது குடும்பத்திலாகும். வீட்டில் மூத்தோரது பேச்சுக்களை கேட்கும் அப்பிள்ளை படிப்படியாக அவற்றை உள்வாங்கிக் கொண்டு விளங்கிக் கொள்வதில் முயற்சிசெய்யும். முதலில் சிறிய சொற்கள் மூலம் சொல்வளத்தை ஆரம்பிக்கும் பிள்ளை படிப்படியாக அதனை விருத்திசெய்து கொள்ளும். இக்காலகட்டத்தில் குழந்தையின் சொற்பிரயோகங்கள் அனைத்துமே தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தினரைக் கொண்டே அமையும். இவ்வாறு கற்றுக்கொள்ளும் பிள்ளை சமூகத்துக்கு சென்ற நிலையிலும் அந்தக்குழந்தை தான் அங்கு கற்ற வசனங்களையே பயன்படுத்த முற்படுவதனை அவதானிக்கலாம். இதன் போதுதான் நாம் முறண்பட்ட குடும்பங்களில் இருந்துவரும் பிள்ளைகள் தேவையற்ற வசனங்களை பிரயோகிப்பதனையும், அதே நேரம் மகிழ்ச்சியான குடும்பங்களில் இருந்துவரும் குழந்தைகள் நல்ல பன்பாடான சொற்களைப் பிரயோகிப்பதனையும் காணலாம்.
அவ்வாறே பெற்றார் தொழிலுக்குச் செல்லும் வீடுகளில் குழந்தைகள் தனிமையில் கவனிப்பாறற்று விடப்படுகின்றனர். அவர்கள் பாடசாலைவிட்டு வந்ததும் பெற்றார் வரும்வரையில் தனது நன்பர்களுடன் சுற்றித்திரியமுற்படுகின்றனர். இரவுநேரத்தில் மட்டும் பெற்றாரின் பார்வையில் இருக்க மற்றைய நேரங்களில் வழிகாட்டல் இன்றி செயற்படுகின்றனர். இத்தகைய மாணவர்கள் சமூகத்துக்குச் செல்லும் போது யாருடையவும் கட்டளைகளுக்கு செவியாய்க்காத நிலைகாணப்படுவதனை அவதானிக்கலாம். அத்துடன் யாரும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதனை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

அதேபோன்று சில குடும்பங்களில் பெற்றார் கடுமையானவர்களாக நடந்து கொள்வார்கள். இந்த சூழலில் வாழும் குழந்தை வளரந்து சமூகத்தில் நடமாடும்போதும் இதன் தாக்கத்தை உணர்வார்கள். குறிப்பாக இவர்களிடையே பயந்த சுபாவம் காணப்படுவதுடன் எந்த ஒருவிடயத்தாலும் விரைவில் தாக்கம் அடையக்கூடியவர்களாக இருப்பதனை அவதானிக்களாம். இவர்கள் அவதானமான வேலைகளின் போது பின்நிற்பதனை அவதானிக்களாம். இவர்களால் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் மனஅழுத்தங்களுக்கு உற்பட்டுள்ளதாகும். இத்தகையவர்கள் பொதுவாக சுயமாக ஒரு இலக்கை உருவாக்கி செயற்பட முடியாதவர்களாக இருப்பார்கள். எப்போதுமே இன்னொருவர் வகுத்துத்தரும் விடயங்களிலே ஈடுபடுவார்கள்.
இதுபோன்று குழந்தைகள் எப்போதும் இன்னொருவரது செயலை பார்த்து பின்பற்றக்கூடியவர்களாவர். வீட்டில் இருக்கும் தாய் தந்தை, சகோதர சகோதரிகள் போன்றௌரை பிள்ளை கூடுதலாகப் பின்பற்றும். இதன்போது தாய்தந்தையர் செயற்பாடுகள் குழந்தைகளின் சமூகசெயற்பாடுகளில் கூடிய தாக்கத்தை விளைவிக்கின்றனர். அவர்கள் இருவரும் நடந்துகொள்ளும் முறையினை அவதானிக்கும் குழந்தை அவன் அல்லது அவள் வளர்ந்ததும் தனது கணவருடன், மனைவியருடன் அதே முறையிலேயே நடந்துகொள்ள முற்படுவர். தாய் தந்தையர் சண்டைசச்சரவில் ஈடுபட்டால் இவர்களும் அந்த நிலைக்கு அவசரமாக சென்றுவிடுவதனை அவதானிக்களாம். இன்று சமூகத்தில் பிரச்சினைக்குறிய குடும்பங்களின் முன்அனுபவங்களை அவதானிக்கும் போது அவரகள் முறன்பாட்டுக்குள்ளானவர்களாக இருந்துள்ளதை அவதானிக்களாம்.

அவ்வாறே தனது சகோதர சகோதரிகள் சிறந்தமுiயில் கல்வியில் ஈடுபடக்கூடியவர்;களாக இருந்தால் அதனை அவதானிக்கும் குழந்தை தானும் கற்றல் உபகரணங்களை கையாள்வதனை அவதானிக்களாம். அல்லது அவர்கள் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களாக இருந்தால் இங்கு வளரும் குழந்தை சிறுவயதிலே களவு, பொய் போன்ற தீயபழக்கங்ளில் ஈடுபடுவதனையும். சமூகத்துக்குச் சென்றதும் மனிதர்களை ஏமாற்றுபவர்களாகவும் நம்பிக்கை மோசடி செய்பவர்களாகவும் மாறிவிடுவதனை காணலாம். அவ்வாறே குழந்தைகள் தனது வயதுக்கு அதிகம் மேம்பட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும்போது அவர்கள் தனது செயற்பாடுகளையும் தனது வயதுக்குறிய நடத்தைகளை விஞ்சி செயற்படுவதனையும் காணலாம்.

உசாத்துணைகள்:
1. முனைவர் கருணாநிதி மா. 2008 – கற்றல் கற்பித்தல் - சேமமடு பதிப்பகம்.
2. முனைவர் ஜயராஜா சபா. 2008 – கல்விச் சமூகவியல் - குடும்பமும் சமூகமயமாக்கலும் கல்வியூம் - சேமமடு பதிக்கம்.
3. கல்வியின் சமூக அடிப்படைகள் - 2009 - இ.தி.பல்.கழகம்

Wednesday, July 4, 2012

ஒரு ஆசிரியருக்கு கற்பித்தல் - கற்றல் செயன்முறையின் விளைதிறனை விருத்தி செய்வதில் கற்றல் கொள்கைகளின் பொருத்தப்பாட்டை கலந்துரையாடுக.



ஒரு ஆசிரியருக்கு மிகவூம் பிரதானமாக அமைவது பிள்ளையின் முயற்சியை ஆசிரியருடன் தொழிற்படச் செய்வதாகும். இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். எனினும் இது சிக்கல் நிறைந்ததாகும். இந்த நிலையில் இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு ஆசிரியர் முன்னதாகவே சில உத்திகளை அறிந்திருக்க வேண்டும். இதனை நாம் கற்றல் கொள்கைகள் என்கின்றௌம். இதில்,

முயன்று தவறல் கொள்கை:

'தோண்டையிக்' என்பவர் இங்கு தூண்டலுக்கு துலங்கலைப் பெற்றுக் கொண்டால் அதனை மீளவூம் பெறுதல் இலகுவானது தூண்டி தான் துலங்கலை ஏற்படுத்துகின்றது. என்கின்றார். இதற்காக அவர் பூனையை அடைத்துவைத்து பரிசோதனையைச் செய்தார்.
இதனை வகுப்புக்களில் கையாளும்போது ஆசிரியர் செரிவானதும் கவர்ச்சியானதுமான முறைகளை தனது பாடத்தின் போது விரிவான முறையில் பயிற்சிகளுடனும், வெகுமதிகளுடனும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்வதால் அந்தச் செயல் உறுதியடைவதற்கும், கற்றுக் கொள்வதற்கும் காரணமாகின்றது. குறிப்பாக கணிதப் பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்வது மற்றும் மாணவர்களது செய்கைகளுக்கு சரி அடையாளம் இடுவது நன்று மிகநன்று போன்ற மகிழ்ச்சிகரமான துண்டல்களால் சிறப்பாக தூண்டச் செய்யலாம்.

பழைய நிபந்தனைப் பாட்டுக் கொள்கை:

இங்கு 'பவ்லோவ்' தூண்டித் துலங்களை ஏற்படுத்தும் இன்னொரு செயற்பாட்டை அறிமுகம் செய்தார். இக்கொள்கையின் அடிப்;படையில் பிள்ளைகளின் கற்றலுக்கும், நற்பழக்கங்களை ஏற்படுத்துவதற்கும், தீய பழக்கங்களை ஒழிப்பதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். பாடசாலையில் மணியோசை கேட்டவுடன் மாணவர்கள் தமது செயற்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர். ஆசிரியர் தூரத்திலே வருவதைக் காணும் மாணவர்கள் அந்த பாடத்துக்கு ஆயத்தமாகின்றனர். தண்டிப்பதற்கு ஒரு தடிவைத்திருந்தால் போதும் அதைக் காணும் மாணவர்கள் அதற்கு துலங்களைக் காட்டுவார்கள்.

தொழில் நிபந்தனைப்பாட்டுக் கொள்கை:

இது நடத்தை உருவாக்கம், மீளவலியூறுத்தல் என்ற பிரதான இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒரு கற்றல் செயற்பாட்டை மாணவரிடம் வளர்ச்சி யiடைய வைத்து நலைநிறுத்த வேண்டுமாயின் அச்செயற்பாட்டை புகழ்தல், பாராட்டுதல், வெகுமதியளித்தல் போன்ற மீளவலியூறுத்தல் மூலம் தொடர்ந்து செய்தல் வேண்டும். அதாவது பொருளாதார வசதியுடைய பிள்ளைகளுக்கு புகழ்தல், தட்டிக் கொடுத்தல் போன்றன சிறந்த மீளவலியூறுத்தலாகும். வறுமையான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு பரிசு கொடுத்தல் சிறந்த மீளவலியுறுத்தலாகும். அதே போல் தீய செயற்பாடுகளில் ஈடுபடும் பிள்ளைகளை தவிர்ப்பதற்காக அறிவூறை, கண்டிப்பு போன்றனவற்றை தொடர்ச்சியாக செய்துவருவது அவர்களிடையே துலங்கலை ஏற்படுத்தக் கூடியதாகும்.


ஊசாத்துணைகள்:
1. கல்வி உளவியல் - 2010 - இ.தி.பல்.கழகம்
2. கல்வி உளவிளல் அடிப்படைகள் - 1992 – தேசிய கல்வி நிறுவகம்

Saturday, May 19, 2012

மாணவர்களின் சமூகம்சார் நடத்தை விருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாதகமான சுற்றாடல் நிலைமைகளை ஆராய்க.


மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் பிள்ளைப்பருவம் மற்றும் கட்டிளமைப் பருவங்களுக்கு இடைப்பட்டவர்களா உள்ளனர். இத்தகைய இவர்களிடத்தில் பல்வேறு காரணிகள் சாதகமான மற்றும் பாதகமான தக்கங்களை எற்படுத்துகின்றன. இதற்கமைய சமூகம்சார் நடத்தை விருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுழற்காரணிகளை அவதானிப்போமாயின்,

1.            பெற்றார்கள்
2.            முத்த சகோதர சகோதரிகள்
3.            சமவயதுக் குழுவினர்
4.            பாடசாலை
5.            சமயஇ சமூக நிறுவனங்கள்
6.            தனியார் கல்வி நிறுவனங்கள்இ வகுப்புக்கள்
7.            ஊடகங்களும் ஓய்வூ நேரங்களும்

ஒரு பிள்ளையின் ஆரம்ப செரல்வாக்குச் செலுத்தும் நிறுவனமாக குடும்பம் காணப்படுகின்றது. அங்கு பெற்றார்கள் மிகவூம் முக்கியமானவர்கள். அவர்களிடம் இருந்து குழந்தை ஆரம் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றது. அதன்போது பெற்றௌரது ஒத்துழைப்புக்கள் மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகின்றது. அடுத்தவர்களுக்கு உதவிசெய்யூம் மனப்பான்மையை பிள்ளைகள் வளர்த்துக் கொள்கிறார்கள். குடும்ப அங்கத்தவர்களிடம காணப்படும் அந்நியோன்யமான உறவூ காரணமாக குழந்தை அதனை தனது வாழ்வில் கடைபிடித்துக் கொள்கின்துடன். வளர்ந்துவிட்ட நிலையிலும் அக்குழந்தை சமூகத்தில் அடுத்தவரகளுடன் ஒற்றுமையாகவூம், உதவிகள் செய்தும்இ மற்றவர்களின் சுக துக்கங்களில் பங்குகொண்டும் இருப்பதற்கு இது காரணமாகின்றது.

                அடுத்து இங்கு காணப்படும் பாதுகாப்பு உணர்வூஇ ஒருவரை ஒருவர் பரிவூடன் நோக்கி அவர்களுக்கு எந்த ஆபத்துக்களும் வராமல் பாதுகாப்பார்கள். இந்த நிலையில் இதனை அவதானிக்கும் குழந்தை தன்னிடமும் இந்த பண்பை வளர்த்துக் கொள்கின்றது. அத்துடன் பெற்றார்கள் தங்களுக்கிடையில் நல்ல வார்த்தகளை பயன்படுத்தி கதைத்துக் கொள்ளும் பேHது அதனையே பிள்ளையூம் கைக் கொள்கின்றது. அது சிறந்த மொழிவளத்துக்கும் அடுத்தவர்கள் தன்னை நல்ல பிள்ளை என்று போற்றுவதற்கும் காரணமாகின்றது. ஒருவரது பேச்சைக் கொண்டு அவரை மட்டிடக்கூடிய நிலையில் சிறந்த பேச்சுவழக்கும் இருக்கும் போது அப்பிள்ளை சென்ற இடங்களிலும் தீய வார்த்தைகளை வெறுத்து நல்ல வார்த்தைகளை பயன்படுத்தவூம் இது காரணமாகின்றது.

                குழந்தைப்பருவம் முன்பிள்ளைப் பருவம் என்பன புலக்காட்சி வளர்ச்சிப் படியில் வேகமாக அபிவிருத்தி அடையூம் காலம் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த அடிப்படையில் குழந்தையின் வாழ்வில் நுண்மதி விருத்தி சம்பந்தமா அடிப்படை எண்ணக்கரு குடும்பத்தில் தான் உருவாகின்றது. குறிப்பாக இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கயமான விடயம் தனது மூத்த சகோதர சகோதரிகளிமிருந்து உடலை சுத்தமாக வைத்திருக்க குளித்தல்இ போசனையன உணவூ பயன்பாடுஇ நித்திரை மற்றும் கழிவூப் பொருள் அகற்றுதல் போன்ற இன்னோரன்ன விடயங்களை பிள்ளை தனது குடும்பத்தில் இருந்த கற்றுக கொள்கின்றது.

                அடுத்து சமவயது குழுக்களுடைய தொடர்புகளினால் குடும்பத்தினால் கிடைக்காத பல விடயங்கள் கிடைக்கப் பெறுகின்றன. குறிப்பாக எதிர்பாலாரிடம் நடந்து கொள்வேண்டி கண்ணியமா முறை குறித்த அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தனக்கு பொருத்தமான உடை அணிகலன்கள் யாது? எப்படி அமைத்துக் கொள்வது போன்ற விடயங்களை பிள்ளை அறிந்து கொள்கின்றது. இதன் போது அவர்கள் தனது மூத்த சகோதரர்களை பின்பற்றி தன்னை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்திக் கொள்கின்றனர். சமவயதுக் குழுக்களுடன் பழகும்போது இன்னுமொரு முக்கியமான செயற்பாடு புது சமூகத்துக்கான பாத்திரங்களையூம், குணநல் இயல்புகளையூம் பக்குவதாகும். இதன்மூலம் நல்ல பண்புகளை அடுத்தவர்களுக்குக் கடத்துவதுடன் அடுத்தவரிடமிருந்த நல்ல பண்புகளை கைக்கொள்ளவூம் முடியூமாகும். அத்துடன் ஒத்தவயதுக்குழு மூலம் கிடைக்கும் உதவி புதிய வலுவை உருவாக்கும். இதனால் மூத்தவர்களுடனான கொடுக்கள் வாங்கள்களின்போது முன்னரைவிடவூம் சுதந்திரமாகவூம், வலுவாகவூம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிமாவதுடன், சுயகற்கை, சுய வலு, தன்னைப்பற்றிய தௌpவூ, நம்பிக்கை என்பன வளர்வதற்கு ஏதவாகின்றது.

                பாடசாலை மாணவர்களின் சமூகம்சார் செயற்பாடுகளில் கூடுதல் பங்கு வகிக்கின்றது. இங்கிருந்துதான் மூத்த பரம்பறையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவூச் செல்வங்கள் இளைய தலைமுறைக்கு கடத்தப்படக் கூடிய இடமாகும். ஒருவன் ஒரு சூழலில் வாழ்வதாயின் அந்த சூழலின் தன்மைகள் பண்பாடுகள் அவனிடம் காணப்படவேண்டும் அப்படி இல்லாவிட்டால் அவனை அந்த சமூகம் ஏற்காது எனவே மாணவன் நாளை அவன் சமூகப்பிரானியாக வாழ்வதற்கு பாடசாலையின் மூத்த பரம்பறையின் வழிகாட்டல்கள் மிகவூம் முக்கியம் பெறுகின்றது. இங்குதான் சமூக மனப்பாங்குளும்இ வாழ்க்கைத் திறன்களும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
அவ்வாறே நல்ல பழக்க வழக்கங்களை பாடசாலை எற்படுத்துகின்றது. மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்கிறார்கள்இ தினமும் பாடசாலை வளவை சுத்தம் செய்கிறார்கள். இதன்போது அவர்களிடம் பொதுச் சொத்துக்கள் குறித்த பெறுமதி வளர்கின்றதுடன் அவற்றை பாதுகாத்து இளைய தலைமுறையின்ருக்கு கொடுக்க வேண்டும் என்று மனோநிலை ஏற்படுகின்றது. அத்துடன் உயர்ந்த தாழ்ந்தஇ வசதியான வசதி குறைந்த பல மாணவர்களை ஒரு மாணவன் சந்திக் நேருகின்றான் அதன் போது தாழ்வான மாணவனை அல்லது வசதி குறைவான மாணவனை ஒதுக்கிவைக்காது சேர்ந்து நடக்கின்றனர். அவனுடன் ஒன்றான் இருந்து உணவூ உண்கின்றனர். அடுத்த மாணவன் பசியோடு இருக்கும்போது தான்மட்டும் உண்ணாமல் அவர்களையூம் சேர்த்துக் கொள்கின்றனர். இத்தகை பல நல்ல அம்சங்களை பாடசாலை ஒருவனுக்கு கொடுக்கின்றது.

சமய, சமூக நிறுவனங்களை அடுத்த மாணவனிடம் சதாகமான விளைவூகளை ஏற்படுத்தும் இடங்கலாகும். இந்த நிறுவனங்களுடன் மாணவர்கள் அதிகம் தொடர்பு வைக்கின்றனர். இங்கு நல்ல விடயங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு மனிதனை நல்ல பண்பாடுகள் உடையவனாக மாற்றுவதில் இந்த நிறுவனங்களுக்கு மிகுந்த பங்கு இருக்கின்றது. ஏனெனில் இவை மனிதனது நம்பிக்கையூடன் இனைந்து செல்லக்கூடியவை. அங்கு கற்பிக்கப்படும் விடயங்களை மாணவர்கள் தனது வாழ்க்கையில் கடைபிடிக்கின்றார்கள். சமூக சேவைகள் ஏற்பாடு செய்ப்படுகின்றன அங்கு பெரியவர்கள் தமது நேரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஊதியம் எதுவூம் இன்றி தமது சிரமத்தை தானம் செய்கின்றனர். இதனை அப்படியே பின்பற்றும் இளைய தலைமுறை அல்லது மாணவர்கள் அவர்களும் இத்தகைய செயற்பHடுகளில் கூடுதலாக ஈடுபாடு காட்டுகின்றனர். இதனால் அவர்களிடையே பொது நோக்குஇ தன்னைப்போல் அடுத்தவரையூம் பார்க்கும் பரந்த மனப்பாங்கு வயர்ச்சியடைகின்றது.

இந்த நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாணவர்களிடைய அடுத்தவரை மதித்தல், பொறுமை, ஒழுங்கமைக்கும் சக்தி மற்றும் தலைமைவகிக்கும் தன்மை, அடுத்தவர்களுடன் ஒத்துப்போகுதல் போன்ற பல நல்ல பண்புகள் மாணவர்களுள் குடிகொள்வதற்கு காரணமாகின்றது.

தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை இன்னொரு மக்கிய சமூக அங்கமாக அது காணப்படுகின்றது. அங்கு மாணவர்கள் பல பிரதேசங்களில் இருந்தும் பல சமூக சூழ்நிலைகளில் இருந்தும் வருகைதருகின்றனர். இந்த நிறுவனங்கள் மாணவர்களிடையே போட்டித் தன்மையை வளர்க்கின்றது. இதன் மூலம் கல்வியில் ஆர்வம் செலுத்தும் தன்மை அதிகரிக்கின்றதுடன். மாணவர்கள் பாடசாலைக்கு மேலதிகமாக கல்வியைப் பெற்று தனது அறிவூ நிலையை விருத்தி செய்து கொள்கின்ற இடமாகவூம் இது காணப்படுகின்றது. மாணவர்களிடையே பல வித்தியாசமான நடையூடை, பழக்கவழக்கங்கள், பேச்சு, உணவூகள் ஏற்பட இது காரணமாகின்து. இதனால் மாணவரகளுக்கு அடுத்தவர்களது தன்மைகளை புரிந்து கொள்வதற்கும்இ வித்தியாசங்களை அனுசரித்து நடந்து கொள்வதற்கும் முக்கிய சந்தர்ப்பமாகின்றது. இந்த நிறுவனங்களுக்கு அதிகமாக வருபவர்கள் மத்திய வகுப்பினராக இருப்பதனால் மத்திய வகுப்பினரது சமூக இயல்புகள் பரவூவதற்கும் காரணமாகின்றது. பாடசாலைகளில் அடங்கியிருப்பதனால் தனது இயல்புகளை வெளிக்காட்ட முடியாதவர்கள் துணிந்த செயற்படவூம் குழுக்களுக்கு தலைமை தாங்கவூம் சந்தர்ப்பம் அமைகின்றது.

மாணவர்கள் தமது ஓய்வூ நேரங்களை இன்பமாகக் கழிப்பதில் கூடிய கவனம் செலுத்துவார்கள். இதன்போது அவர்கள் இணையம், தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல், பத்திரிகை போன்ற விடயங்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் கணினி, தொலைக்காட்சி போன்ற வற்றில் அவர்கள் அதிகநேரத்தை செலவிடுகின்றர். அதில் காட்சிப்படுத்தப்படுபவற்றை அவர்கள் பின்பற்றுகின்றனர். இதன் மூலம் சர்வதேச கலாசாரங்களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். மாற்றமுறும் உலக நிலைகளை அறிந்து அதற்கேற்ப தன்னை தயார்செய்து கொள்ளக்கூடியவர்களாக மாறுகிறனர். இணையத்தின் மூலம் பலருடன் தொடர்பு கொள்ளக்கூடிய வசதி ஏற்படுகின்றது. புதிய அறிவூகளை உடனுக்குடன் அறிந்து அதனை பிரயோகிக்க கற்றுக் கொள்கிறார்கள். தனது கருத்துக்களை பயமினிறி தெரிவிக்கக் கூடிய இடமாக இணையம் இன்று காணப்படுகின்றது. பல நல்ல நபர்களுடைய நேரடி உறவினால் மாணவர்கள் தனது மனப்பாங்குகளை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கு வழிஏற்படுகின்றது. அத்தகைய முன்மாதிரிகளை தானும் பின்னபற்றி எதிர்காலத்தில் அத்தகைய பிரபலங்களாக, உலகுக்குப் பிரயோசனம் உடையவர்களாக அவர்களும் தங்களை மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யக்கூடியவர்களாக மாறுவார்கள். பத்திரகை சஞ்சிககையைப பொறுத்தரையூம் இதே நிலைப்பாடுகளுக்கு மாணர்கள் வருவார்கள். அங்கு அவர்களிடம் வாசிப்புத்துறை வளர்வதற்கும் பாத்திரிகைகளுக்கு எழுதுவதன் மூலம் எழுத்துத்துறை வளர்ச்சியடைவதோடு அறிவூம் வளர்வதற்கு அது காரணமாகின்றது.